திருச்சியில் காவலர்களுக்கு ஆற்றுப்படுத்தும் திறன்கள் தொடர்பான சிறப்பு செய்முறை பயிற்சி முகாம் – மத்திய மண்டல ஐ.ஜி தொடங்கி வைத்தார்!
திருச்சி மாவட்டத்தில் காவலர்களுக்கான ஆற்றுப்படுத்தும் திறன்கள் (WELLBEING) தொடர்பாக இரண்டு நாட்கள் சிறப்பு செய்முறை பயிற்சி முகாமானது திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியினை மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.




இதில் மதுரை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக பேராசிரியர் கண்ணன் மற்றும் குருபாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மத்திய மண்டலத்தில் உள்ள 60 காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்களுக்கு ஆற்றுப்படுத்தும் வழிமுறைகள் பற்றிய கருத்துரைகள், ஆற்றுப்படுத்தும் கலைகள், முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் காவல் அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






