திருச்சியில் வரதட்சணை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!
திருச்சியில் வரதட்சணை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்-திட்டத்தின் கீழ் வரதட்சணை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.