மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் திட்டம்!
மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் திட்டம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் அரசு தரப்பில் திட்டமிட்டு சதி செய்துவிட்டதாக கருதி முருக பக்தர்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.
தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம்- வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் உறுதி:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த ராம ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என 2 நாட்களுக்கு முன்பு உத்தர விட்டது.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என மிகுந்த நம்பிக் கையில் இருந்த பக்தர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து இந்து அமைப்பினர் கூறியதாவது: தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவே அரசு தரப்பில் தகவல் பரப்பப்பட்டது. எனினும் இதை நாங்கள் நம்பவில்லை. மனுதாரரும் தீபம் ஏற்ற தயார் நிலையில் இருந்தார்.அரசு தரப்பில் மேல்முறையீடு முயற்சி முதலில் கைகூடவில்லை. இதன் பின்னர் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்ற முடிவில் இருப்பது தெரிந்தது. தீபம் ஏற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை என்பதும் தெரிந்தது.
உடனே அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தோம். அப்போது கோயில் அலுவலர் தரப்பில், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது . இதனால்,தமிழக போலீசாரையும், அரசையும் நம்பி எந்த பலனும் இல்லை என்பதை அறிந்து, நீதிமன்றத்தில் தெரிவித்தோம். அவமதிப்பு வழக்கை சந்திக்க அரசும் தயாராகவே இருந்தது.
இதனாலேயே, நியாயத்தை சட்டப்படி நிறைவேற்ற நீதிபதி புதிய உத்தரவை பிறப்பித்தார். சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன், எங்களை தீபம் ஏற்ற அனுமதித்தார். இதை சிறிதும் எதிர்பார்க்காத அதிகாரிகள் திடீரென ஆலோசித்து 144 தடை உத்தரவை மாலை 6.30 மணிக்கு மேல் பிறப்பித்தனர்.இந்த உத்தரவை காரணம் காட்டி மலையேற விடக்கூடாது என திட்டமிட்டனர். சிஐஎஸ்எப் போலீசார் 65 பேர் பாதுகாப்புக்கு வந்தும், அவர்களை அனுமதிக்கவில்லை. நீதிபதியே மலைக்கு வரவுள்ளார் என தகவல் பரப்பப்பட்டது.
மாவட்ட நீதிபதியான ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவு தான் பெரிது என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 144-தடையை காரணம் காட்டி போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். சட்டரீதியாக இது பெரும் தவறு. எனினும் யாரும் தட்டிக்கேட்க முடியவில்லை.

சிஐஎஸ்எப் படையினரையேகூட விடமாட்டோம் என்பதுபோல் போலீசார் பேசினர். இது தவறில்லையா? மத்திய படையினர் வந்ததுதான் தவறு என்றும், 144 உத்தரவால் அதைமீறி எதையும் செய்ய முடியாது என்றும் தெரிவித்துவிட்டனர்.
இதனால் உறுதியாக தீபம் ஏற்றப்பட்டுவிடும் என்ற எங்களின் நம்பிக்கை தகர்ந்தது. அரசு மிக உறுதியாக இருந்து தீபம் ஏற்ற விடாமல் தடுத்துவிட்டது. இது மலைபோல் நம்பியிருந்த முருக பக்தர்களை வேதனையின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
தர்கா நிர்வாகமே அமைதி காக்கும்போது அரசு ஏன் இந்தளவுக்கு பிடிவாதமாக பக்தர்களுக்கு எதிராக செயல்படுகிறது என தெரியவில்லை.
சட்டரீதியாக அனுமதி பெற்று தீபம் ஏற்றுவோம். அதை உடனே செய்வோம். அடுத்த ஆண்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.நீதிமன்ற உத்தரவை இவ்வளவு அலட்சியமாக யாரும் கையாண்டதில்லை. பாஜக, இந்து முன்னணிக்கு எதிராக செயல் படுவதாகக் கூறி, முருக பக்தர்களை வேதனைப்படுத்தி விட்டனர். உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இதை மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
அவர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையில் மாநில அளவில் மிகப்பெரிய விழிப்புணர்வு மற்றும் போராட்டங்களை முன்னெடுப்போம். இன்றைய வழக்கின் உத்தரவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அந்த உத்தரவை கோயில் நிர்வாகமும், மாநகர காவல் துறையும் நிறைவேற்ற வில்லை. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் மத்திய தொழிலக பாதுகாப்புபடையினரையும் கைது செய்வோம் என கூறுகிறார்கள்.
இந்த நாட்டில் இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் இல்லை. நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்ற மறுக்கிறது. இங்குள்ள இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அரசுக்குத்தான் பிரச்சினை உள்ளது. ஓட்டு அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவை அரசு அவமதித்துள்ளது.
சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் இந்துக்கள் மலையில் தீபம் ஏற்ற முடியவில்லை. எங்களையும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகளையும் கைது செய்து விடுவோம் என கூறுகிறார்கள். இது திட்டமிட்ட சதி. இதனை சட்டத்தின்படி மீண்டும் எதிர் கொள்வோம். சத்தியமாக சொல்கிறேன், நிச்சயமாக சட்டத்தின்படி மலை உச்சியில் தீபம் ஏற்றுவோம். காத்திருந்து காத்திருந்து கால் வலித்ததுதான் மிச்சம். இவ்வாறு அவர்கள் கூறினார்.


Comments are closed.