செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 7 வரை அவகாசம் நீட்டிப்பு!
தெருவில் கைவிடப்படுவதை தவிர்க்க நடவடிக்கை -மாநகராட்சி அறிவிப்பு.
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 7 வரை அவகாசம் நீட்டிப்பு!
தெருவில் கைவிடப்படுவதை தவிர்க்க நடவடிக்கை -மாநகராட்சி அறிவிப்பு.

சென்னை மாநகராட்சியில் இதுவரை 65,422 செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 24,477-க்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெறுவதற்கு நவம்பர் 23 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும், இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள் முதல் ஓராண்டு காலத்திற்கு மட்டும் உரிமம் செல்லத்தக்கது என்பதை உறுதிப்படுத்தி மீண்டும் உரிமம் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை தடுப்பதற்காகவும் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் செலுத்தி உரிமம் பெறுவது பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மைக்ரோ சிப்பில் செல்லப்பிராணிகளின் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகள் பதிவு செய்யப்படும்.இந்நிலையில், செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கோரிக்கை அடிப்படையில் இந்த காலக்கெடு டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருவிக நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் (ஞாயிறு உட்பட) காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை உரிமம் பெறும் சேவையை பெறலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.


Comments are closed.