இந்தியன் பிக்கிள்பால் லீக் அணிகள் சென்னையில் அறிமுகம்.
இந்தியன் பிக்கிள்பால் லீக் அணிகள் சென்னையில் அறிமுகம்.
இந்தியன் பிக்கிள் பால் லீக் (Indian Pickleball league) தனது தொடக்க சீசனுக்கான முதல் ஐந்து உரிமையாளர்களை வெளியிட்டுள்ளது.

இந்திய பிக்கிள்பால் சங்கத்தின் ஆதரவுடன் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள் விளையாட்டு அரங்கில் வரும் டிசம்பர் 1 முதல் 7 வரை இந்தியன் பிக்கிள்பால் லீக் (ஐபிபிஎல்) போட்டி நடைபெற உள்ளது.
இந்த தொடரில் கலந்து கொள்ளும் அணிகளின் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னை கிண்டியில் நடைபெற்றது.ஒவ்வொரு நகரமும் இப்போது ஒரு புதிய போட்டி அடையாளத்துடன் லீக்கில் நுழைகிறது. இதில் மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், குர்கான் ஆகிய நகரங்களை மையமாக கொண்ட மும்பை ஸ்மாஷர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், சென்னை சூப்பர் வாரியர்ஸ், ஹைதராபாத் ராயல்ஸ், குர்கான் கேப்பிடல் வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன.இந்தியன் பிக்கிள்பால் லீக்கில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. மீதம் உள்ள ஒரு அணி பின்னர் அறிவிக்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகைகள் ஸ்ரீலீலா மற்றும் காயது லோஹர் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். இந்தியாவின் முன்னணி பிக்கிள் பால் லீக் திறமையாளர்களான மிஹிகா யாதவ் மற்றும் அமன் படேல் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். இது விளையாட்டின் வளர்ந்து வரும் கலாச்சார கவர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.


Comments are closed.