பிரதமர் மோடியுடன் நாளை எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.
பிரதமர் மோடியுடன் நாளை எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.

தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து பேச வாய்ப்பு
கோவைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். விமான நிலையம் வந்து
இறங்கும் பிரதமரை எடப்பாடி பழனிசாமி வரவேற்கிறார். தொடர்ந்து விமான நிலையத்திலேயே அவர் பிரதமர் மோடியுடன் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பீகார் தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மோடியுடன் எடப்பாடி
பழனிசாமி சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமரை சந்திக்கும்போது கூட்டணி விவகாரம் மற்றும் தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பேசுவார் என தெரிகிறது.


Comments are closed.