தென் தமிழ்நாட்டின் முதன்மை சிவாலயமான, திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு, அறங்காவலர் குழு தலைவர் தேர்வு!
தென் தமிழ்நாட்டின் முதன்மை சிவாலயமான, திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு, அறங்காவலர் குழு தலைவர் தேர்வு!
திருநெல்வேலி,நவ.5:-

தென் தமிழ்நாட்டின் முதன்மையான சிவாலயமான, திருநெல்வேலி வட்டம் மற்றும் நகர், திருநெல்வேலி “அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்- அருள்தரும் அன்னை காந்திமதி அம்மன்” திருக்கோயிலுக்கு, தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை உத்தரவுப்படி, மு.செல்லையா, உஷா ராமன், சோனா வெங்கடாச்சலம், ச.செல்வராஜ், ப.கீதா ஆகியோர், அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், இன்று (நவம்பர்.5) காலையில், பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், திருக்கோவில் உதவி ஆணையர் முன்னிலையில், “அறங்காவலர் குழு தலைவர்” தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மு.செல்லையா என்பவர், உறுப்பினர்கள் அனைவரின் வாக்குகளை பெற்று, “அறங்காவலர் குழு தலைவர்” ஆக, ஒருமனதாக “தேர்வு” செய்யப்பட்டார். அறங்காவலர் குழு தலைவர் தேர்ந்து எடுக்கப்பட்டதை தொடர்ந்து, உறுப்பினர்கள் அனைவரும் உதவி ஆணையர் முன்னிலையில், “உறுதிமொழி” ஏற்றனர். திருக்கோயில் செயல் அலுவலர், திருநெல்வேலி மேற்கு சரக ஆய்வாளர், திருக்கோயில் கண்காணிப்பாளர், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஆண்- பெண் பக்தர்கள், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.