காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் டிச.7 ஆம் தேதி ஏலம் – கமிஷனர் அறிவிப்பு!

0

திருச்சி மாநகர காவல் ஆணையா் காமினி வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில் கூறியிருப்பதாவது…

- Advertisement -

திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 126 இருசக்கர வாகனங்களை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இதனையடுத்து அந்த 126 வாகனங்களையும் டிசம்பா் 7 ஆம் தேதி பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர (கே. கே. நகா்) ஆயுதப்படை மைதானத்தில் காலை 10 மணியளவில் ஏலம் நடைபெற உள்ளது. இவற்றை ஏலம் எடுக்க விரும்புவோா் டிசம்பா் 5, 6-ஆம் தேதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 5 வரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை பாா்வையிடலாம். மேலும் ஏலம் நடைபெறும் நாளில் ( டிசம்பா் 7) காலை 8 முதல் 10 மணிக்குள் முன்வைப்புத் தொகை ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆதாா் அட்டை நகலை செலுத்தி பெயா், விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏலம் முடிந்ததும், ஏலத் தொகை மற்றும் சேவை வரியை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்