பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் கலைச் சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது

0

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் கலைச் சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் கலைச்சேவையை பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது ஒருங்கிணைப்பில், நிறுவனர் தலைவர் வேல்முருகன் தலைமையில், மாநில செயலாளர் திருச்சி ரமேஷ், மாநில துணை செயலாளர் ராஜா, மாநில துணை செயலாளர் கார்த்திக் , மாநில மகளிர் அணி தலைவி பொன்முடி பன்னீர்செல்வம், மாநில மகளிர் அணி கொள்கை பரப்புச் செயலாளர் உமா மகேஸ்வரி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
வேர்கள் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் S.அடைக்கல ராஜா அவர்களின் கலைச் சேவையை பாராட்டி சேவை ரத்னா விருது வழங்கப்பட்டது, தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பண்ணை MP.சிங்காரவேலன் அவர்களின் கலைச் சேவையை பாராட்டி சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது, மேலும் நகை வடிவமைப்பாளர் தாமோதரன் அவர்களுக்கு தொழிலதிபர் விருது, சிறந்த லோகோ டிசைனர் சதீஷ்குமார் அவர்களுக்கு படைப்பாளர் விருது வழங்கப்பட்டது,

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், ஜே.கே.சி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் பா.ஜான் ராஜ்குமார், பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார பிரிவு மாநில செயலாளர் சுதாகர் என்கிற S.வெங்கடேசன், அமைப்பின் சட்டஆலோசகர் CB .ரமேஷ், இந்து சேன அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர்
M.வீரேந்திர குமார், அஸ்விதா அட்வர்டைசிங் கம்பெனி நிறுவனர் ஹரிஹரன், ஆங்கிலத்துறை பேராசிரியர் பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது வழங்கி சிறப்பித்தனர்,


திருச்சி மாவட்ட தலைவர் NT, முருகன், திருச்சி மாவட்ட செயலாளர் ஐயப்பன், திருச்சி மாவட்ட துணைத் தலைவர் அன்வர்தீன், திருச்சி மாவட்ட துணை அமைப்பு செயலாளர் விக்டர், திருச்சி மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் வேலுச்சாமி, திருச்சி மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவி கலாவதி,
திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வம், திருச்சி மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் வனிதா, திருச்சி மாவட்டம் மகளிர் அணி கொள்கை பரப்பு செயலாளர் LR.சுகந்தி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்