தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருச்சியில் சிலை அமைக்க மனு – தமிழக தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம்

தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருச்சியில் சிலை அமைக்க மனு – தமிழக தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம்


திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக தேவேந்திரகுல வேளாளர் நல சங்கம் சார்பில் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருச்சிராப்பள்ளி மத்திய பகுதியில் சிலை நிறுவ நகராட்சி அலுவலகத்தால் ந.க.எண்.எப்1/8762/2023/மையம், நாள்-04-10-2023 மற்றும் மாமன்ற தீர்மானம் எண்-712-ன்படி கடந்த 03-10-2023ம் தேதியன்று தங்களுக்கு பரிந்துரை செய்த மனு சம்பந்தமாக மனு அளித்தனர் மனுவில்
எங்களின் இயக்கத்தின் சார்பாக பல மாவட்டங்களில் நலத்திட்டங்களை செய்து வருகிறோம். நாங்கள் அனைவரும் நாட்டு மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் போராடி உயிர் தியாகம் செய்த அனைத்து தலைவர்களுக்கும் பிறந்த நாட்களிலும், நினைவு நாட்களிலும் பல நலதிட்ட உதவிகளையும் செய்தும், மரியாதையும் செலுத்தி வருகின்றோம்.

- Advertisement -

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில், மத்திய பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு சிலை அமைக்க கோரி எங்கள் மாநில தலைவர் பாச ராஜேந்திரன் அவர்களால் கடந்த 15-09-2023ம் தேதியன்று மனு கொடுக்கப்பட்டது. மேலும் அனைத்து மக்களின் கோரிக்கையை ஏற்று திருச்சி மாவட்டத்தில் சிலை நிறுவ மாமன்ற தீர்மானம் எண்-712-ன்படி கடந்த 03-10-2023ம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தால் ந.க.எண்.எப்1/8762/2023/மையம், நாள்-04-10-2023
வழங்கிய கடிதத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மேற்கு வட்டம், கோ.அபிஷேகபுரம் கோட்டம், வார்டு குழு அலுவலகம் 5, தேர்தல் வார்டு எண்-28, வார்டு Y, பிளாக் எண்-24, நகரளவு எண்-7/8-ல் கட்டுப்பட்ட ரயத்துவாரி நஞ்சை பரப்பு 0.4274.0, செயலாளர், தில்லைநகர், வீடு கட்டும் சங்கம் என்ற பெயரில் உள்ளது. இவ்விடம் தென்னூர் அண்ணா நகர் குடியிருப்பு மனைப்பிரிவில் திறவிடம் என ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநகராட்சியிடம் ஆவண எண்- 2418/1999-ன்படி 30-06-1999-ல் ஒப்படைப்பு செய்யப்பட்ட இடம் அணுகு சாலையாக மாநகராட்சிக்கு சொந்தமான சிவப்பிரகாசம் சாலையில் உள்ளது என மாமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டு, மேற்படி தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் சிலையினை அமைக்க தங்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஆனால், தாங்கள் பரிந்தரை கடிதத்தை பெற்றுகொண்டு இன்றுவரை தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் சிலை சம்பந்தமாக எந்த அளவிற்கு முன் ஏற்பாடுகள் செய்துள்ளீர்கள் என்ற விவரம் எங்களுக்கு தெரியாத நிலை உள்ளது. இதனால் தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர் அலுவலீகமும், நகராட்சி அலுவலகமும், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தராமல் ஏமாற்றி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே அய்யா அவர்கள், நகராட்சி அலுவலகத்தால் ந.க.எண்.எப்1/8762/2023/மையம், -04-10-2023-வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை ஏற்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து விரைவாக தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் சிலை நிறுவதற்கு நடவடிக்கை எடுத்து வழிவகை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
ஏன்று குறிப்பிட்டு இருந்த மனுவை மாவட்ட ஆட்சியர் இடத்தில் வழங்கினார்கள், நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்