திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுகிறதா துரை வைகோ பரபரப்பு பேச்சு?
திருச்சியில் நடைபெற்று வரும் மதிமுக மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ மேடை பேச்சு;
மதுரை மாநாட்டில் மல்லைசத்யா பேசும் போது ஏகலைவன் என்று தன்னை சொல்லிக்கொண்டார். அப்படி என்றால் வைகோ துரோணாச்சாரியாரா? மகத்தான தலைவரை இப்படி தான் மேடையில் சொல்வதா?


கூட்டணி மாறிய போது பல அவதூறுகள் வந்தது. அதில் இருந்து நாம் இன்னும் மீளவில்லை. அது போல இன்னொருமுறை ஆகிவிட கூடாது. இந்த கூட்டணியில் எதற்காக சேர்ந்தோம்? மதசார்பின்மைக்காக. நமது தொலைதூரப் பார்வை மதச்சார்பின்மை தலை தூக்கி விடக் கூடாது என்பதுதான். அதற்காகத்தான் இந்த கூட்டணியில் நீடித்திருக்கிறோம்.
நமக்கு தன்மானம் தேவையா? சுயமரியாதை தேவையா? அங்கீகாரம் தேவையா?.
திருச்சி மாநாட்டில் பங்கேற்று கட்சியின் அங்கீகாரம் பெறுவோம் என தெரிவித்தார்.





Comments are closed.