திருச்சி சூரியூரில் வரும் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி – முன்னேற்பாடுகள் தீவிரம்!

0

- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகாடுகள், விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்.
பொங்கல் பண்டிகை என்றாலே தமிழ்நாட்டில், தமிழரின் பாரம்பரியமான விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையானதான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் நாள் அன்று  ஶ்ரீநற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவையொட்டி மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாகும். இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள்.

அப்படி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியின் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர்  பெரிய குளத்தில் திருச்சி மாவட்டத்தின் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளாக விழா மேடை மற்றும் தடுப்பு வேலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். 400 மீட்டர் தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு களத்தில் 15 மீட்டர் வரை தேங்காய் நார்கள் கொட்டப்பட உள்ளன. ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு போட்டியை காண  வருவதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் சூரியூர் கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கான பணிகளை சூரியூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் விஜி ஆறுமுகம், சூரியூர் அழகர், சாமிநாதன் பிள்ளை, மீனாட்சி சுந்தரம் ஐயர், முருகன், செந்தில் குமார் ஆகியோர் மேற்பார்வை செய்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாடுகளும் 300க்கும் மேற்பட்ட மாடுபுடி வீரர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்