புதுக்கோட்டை பகுதியில் கிராமம், கிராமமாக சென்று சுயேட்சை வேட்பாளர் தாமோதரன் தீவிர பிரச்சாரம்!
மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பத்மஶ்ரீ தாமோதரன் போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட செட்டிப்பட்டி, புலியூர், கிள்ளுக்கோட்டை, புத்தாம்பூர், பெரம்பூர், கீரனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி கேஸ் ஸ்டவ் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்கள் நாங்கள் நிச்சயம் உங்களுக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தனர்.