திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் – புதிதாக பொறுப்பேற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் – புதிதாக பொறுப்பேற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் பேட்டி

 

திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதீப் குமார் தமிழ்நாடு பேரூராட்சி இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணன் திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய மாவட்ட ஆட்சியராக, ஆட்சியர் அலுவலகத்தில் சரவணன் ஜூன்.25 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பெரியார் மார்க்கெட், காவிரி மேம்பாலம் பணிகள், ரயில்வே மேம்பால பணிகள், சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி, காமராஜர் நூலகம் கட்டுமான பணி, ஒலிம்பிக் அகாடமி கட்டுமான பணி, கூட்டு குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

- Advertisement -

மக்களிடம் குறைகளை அரசே நேரடியாக கேட்டு பெரும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் நான்காவது கட்ட முகாம் அடுத்த மாதம் திருச்சி மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத உள்ள குறைகள், பட்டா கோரிக்கைகள், மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அதை நிவர்த்தி செய்யப்படும்.

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தை பராமரிப்பதற்கான தனியார் நிறுவன டெண்டர் பணிகள் இன்னும் நான்கு தினங்களில் முடிவடைந்த பின்னர், பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

மாவட்ட ஆட்சியராக உங்களது முதல் பணி என்ன என்பது குறித்த கேள்விக்கு, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்னுரிமை அளிப்பேன் என தெரிவித்தார்.

மேலும் திருச்சி மாநகராட்சியை பொருத்தவரை ஐந்து வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் சாலைகள், மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை சீரமைக்க 107 கிலோ மீட்டருக்கு work order வழங்கப்பட்டுள்ளது. வேலைகளை மழை காலத்திற்கு முன்னால் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதனை அரசு அலுவலர்களிடம் எந்தவித தயக்கமும் இன்றி முன் வைக்க வேண்டும், அதனை நிவர்த்தி செய்ய தான் நாங்கள் பணியில் உள்ளோம் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்