திருச்சியில் டெய்கின் நிறுவனத்தின் புதிய “யுனிவர்ஸ் ஏர் சொல்யூஷன்” ஷோரூமை தென்னிந்திய மண்டல இயக்குனர் திறந்து வைத்தார்!

உலகின் நம்பர் ஒன் நிறுவனமான டெய்கின் நிறுவனத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு சிறப்பான முறையில் டெய்கின் அனைத்து புராடெக்டர்களுக்கும் சிறந்த சேவையை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி புத்தூர் அருணா நகர் பகுதியில் “புதிய டெய்கின் சொல்யூஷன் பிளாசா யுனிவர்ஸ் ஏர் சொல்யூஷன்” ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக டெய்கின் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல இயக்குனர் ராவோ கலந்துகொண்டு புதிய ஷோருமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



தொடர்ந்து தமிழ்நாடு கிளைத் தலைவர் அசோக், முதன்மை மேலாளர் காளீஸ்வரன், மேலாளர் ஹரி பிரசாத் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்வை சிறப்பித்தனர். முன்னதாக இவ்விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களை டெய்கின் யுனிவர்ஸ் ஏர் சல்யூஷன் ஷோரூமின் நிர்வாக இயக்குனர்கள் நந்தகுமார் மற்றும் அருண் ஆகியோர் பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்றனர்.


தொடர்ந்து இந்த புதிய ஷோரூம் குறித்து மண்டல இயக்குனர் ராவோ கூறுகையில்…
ஏர் கன்டிசனருக்கு ஒரு பிரத்தியேகமான சொல்யூஸன் கொடுப்பதற்காக இந்த டெய்கின் யுனிவர்ஸ் ஏர் சொல்யூஷன் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஸ்ப்லிட் ஏசி, டக்டபுள் (DUCTABLE) உள்பட அனைத்து விதமான டெய்கின் தயாரிப்புகளும் ஒரே இடத்தில் கிடைக்கும். பொது மக்கள் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.




