திருச்சியில் மகளிருக்கு எதிரான பாலியல் அத்துமீறல், ஜீவனாம்சம் சட்டம், மகளிர் நலன் உரிமைகள் போன்ற விழிப்புணர்வு கூட்டம்

0

ஜே கே சி அறக்கட்டளை மற்றும் சமூக நீதி மக்கள் நல உரிமை இயக்கம் சார்பில் மகளிருக்கு எதிரான பாலியல் அத்துமீறல், ஜீவனாம்சம் சட்டம், மகளிர் நலன் உரிமைகள் போன்ற விழிப்புணர்வு கூட்டம்

 

- Advertisement -

திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் சமூக நீதி மக்கள் நல உரிமை இயக்கம் சார்பில் திருச்சி பீமநகரில் வருகிற 29.9.23 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மகளிருக்கு எதிரான பாலியல் அத்துமீறல், ஜீவனாம்சம் சட்டம், மகளிர் நலன் உரிமைகள் போன்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சிபி ரமேஷ் எம் ஏ பி எல் தலைமை தாங்குகிறார். ஜேகேசி அறக்கட்டளை கௌரவத் தலைவர் பேராசிரியர் பி ரவி சேகர் முன்னிலை வைக்கிறார். ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் என்.எம். சலாவுதீன் வரவேற்புரை ஆற்றுகிறார். இதில் சட்ட விழிப்புணர்வு கருத்துறை வழங்க இருக்கிறார்கள். ஜீவனாம்சம் சட்டம், பணியிடத்து பாலியல் அத்துமீறல், மகளிர் நலச்சட்டம், குழந்தைகள் நலச் சட்டம், போக்சோ சட்டம் குறித்து வழக்கறிஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க இருக்கிறார்கள். முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆர் அருள்செல்வி, ஜே கே சி அறக்கட்டளை நிறுவனம் சட்ட தன்னார்வலருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்களும் கலந்து கொள்கிறார்கள். இதில் ஜேகேசி மகளிர் அணி தலைவி சகுந்தலா சந்தானகிருஷ்ணன், ஆசிரியர் எம் அலெக்சாண்டர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். முடிவில் ராஜேஸ் நன்றி கூறுகிறார்

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்