மது போதையில் அதிவேகத்தில் வந்த கார் கடுவனூர் பகுதியை சேர்ந்த முதியவர் மீது மோதி விபத்து 

மது போதையில் அதிவேகத்தில் வந்த கார் கடுவனூர் பகுதியை சேர்ந்த முதியவர் மீது மோதி விபத்து

 

Bismi

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராமதாஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் வழியில், திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்த திமுக கொடி கட்டிய கார் அதிவேகத்தில் வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் முதியவர் ராமதாசுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது ஆனால் விபத்து ஏற்படுத்திய காரில், பயணம் செய்த நபர்களை மட்டும் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றி செல்வதற்காக முயற்சி செய்ததாக கூறப்படுகிறது, ஆகையால் ஊர் மக்கள் சேர்ந்து வலியுறுத்தியை தொடர்ந்து முதியோர் ராமலிங்கத்தையும் மருத்துவ சிகிச்சைக்காக அதே ஆம்புலன்ஸில் ஏற்றுச் சென்றதாக கூறப்படுகிறது,

அத்துடன் காரில் வந்தவர்கள் குடிபோதையில் தான் வேகமாக வந்து எடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது,

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது, இது குறித்து அப்பகுதி சேர்ந்த காவல்துறையினர் விசாரணைகள் கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்