அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் மற்றும் சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் இணைந்து நடத்திய இல்லம் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் மற்றும் சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் இணைந்து நடத்திய இல்லம் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று காலை 9 மணிக்கு சௌராஷ்ட்ரா தெருவில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட போஷகர் திரு. N. V. முரளி அவர்கள் வழக்கறிஞர் சுதர்சன் அவர்கள் இணைந்து 251 நபர்களுக்கு இலவசமாக விநாயகர் சிலையும் பூஜை பொருட்களும் வழங்கினர். சிறப்பு விருந்தினராக ஐயப்ப சேவா சங்கம் செயலாளர் ஸ்ரீதர் பொருளாளர் சுரேஷ் சௌராஷ்டிரா சபா தலைவர் ஜெனார்த்தனன், வாலிபர் சங்கத் தலைவர் மகேஷ் செயலாளர் ஹரிநாத் மற்றும் விழா ஏற்பாட்டாலர் பொருளாளர் அம்சராம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்