குழுமாயி அம்மன் கோவில் குட்டி குடி திருவிழாவை முன்னிட்டு இளைய அன்பிலாரின் அன்புத் தம்பிகள் குழு சார்பில் மாபெரும் அன்னதானம்!

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 19 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி மறு காப்பு கட்டுதலுடன் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் நிகழ்ச்சி நேற்று புத்தூர் மந்தையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் புத்தூர் நால்ரோடு அருகே இளைய அன்பிலாரின் அன்புத் தம்பிகள் குழு சார்பில் 14ம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

இந்த அன்னதானத்தை புத்தூர் மீன் மார்க்கெட் சங்கத் தலைவர் சரவணன் தொடங்கி வைத்தார். அன்னதான ஏற்பாடுகளை விழா கமிட்டி உறுப்பினர்கள் புத்தூர் கே.கணேஷ் எம்.பி.ஏ, மீன் மார்க்கெட் கே.ரமேஷ் உள்பட பலர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த அன்னதானத்தில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்