- Advertisement -

பொய் வழக்கு போடும் போலீசார் –  மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் ரவுடி மனு!

- Advertisement -

திருச்சி அருகே உள்ள கிளிக்கூடு பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜா. இவர் போலீசார் தன் மீது பொய் வழக்கு போடுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளிததுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,…

Bismi

எனக்கு திருமணமாகி மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு கொலை வழக்கில் எனது பெயர் இருந்தது. அதன் பின் தொடர்ச்சியாக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தொடர்ந்த 4 வழக்குகளில் இருந்தும் விடுதலை ஆகி விட்டேன். தற்போது மனைவி குழந்தைகளுடன் திருந்தி வாழ்ந்து வருகிறேன். ஆனால் காவல்துறையினர் என் மீது தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்ய முயற்சிக்கிறார்கள். என்னை விசாரணைக்கு அழைத்து செல்கிறார்கள். குற்ற செயல்களில் இருந்து விலகி திருந்தி வாழ நினைக்கும் எனக்கு தொந்தரவு கொடுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் விவசாயம் செய்வதற்கு வங்கி கடன் வழங்கி உதவி செய்யும் படியும் வேண்டுகிறேன் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்