தளபதி விஜய்யை பார்க்க வேண்டும் என்பதற்காக விஜய் முகத்தை ரசிகர் ஒருவர் தனது உடலில் டாட்டூ வரைந்துள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்பாரதி
தீவிர தளபதி விஜய் ரசிகர், சென்னையில் ஐடி துறையில் பணியாற்றிவருகிறார்,
அழகிய தமிழ் மகன் படத்தைப் பார்த்ததிலிருந்து தளபதி விஜய்க்கு ரசிகரான இவர்,தளபதி விஜய் நடித்த திரைப்படங்களை முதல்நாளில் பார்ப்பதும், பிறந்தநாளின்போது நண்பர்களுடன் கேக்வெட்டி கொண்டாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

ஒருமுறையாவது தளபதியை நேரில் சந்திக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்,
ஆனால் அவருடைய முயற்சி தோல்வி அடைந்து வரும் நிலையில்,
வருகிற ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு
தனது உள்ளம் கவர்ந்த நடிகர் விஜய் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட முடிவெடுத்த இவர் திருச்சியில் பிரபலமான why why Tattoo சென்டரில் தளபதி விஜயின் முகத்தை தனது முதுகு பகுதி முழுவதும் சுமார் 16 மணிநேரம் காத்திருந்து டாட்டூவாக வரைந்து கொண்டார். அப்போது டாட்டூ டிசைனர் கோடீஸ்வரன் கூறுகையில் ராஜ்பாரதி தளபதி விஜயின் தீவிர ரசிகராக இருந்தால்,வலியை பொறுத்துக்கொண்டு சுமார் 16 மணி நேரம் காத்திருந்து தனது உடலில் தளபதி விஜய் முகத்தை மிகப்பெரிய அளவில் ஓவியமாக (டாட்டூவாக) வரைந்து கொண்டார், இவர் விஜய்யின் மனதில் இடம் பிடிக்கும் வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார்.
இந்த டாட்டூவை வரைந்துக்கொண்டதன் மூலம் நிச்சயம் விஜய்யை நேரில் சந்திக்கும் நீண்டநாள் கனவும் நிறைவேற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
உலகம் முழுவதும் திரைப்பட நடிகர் தளபதி விஜய்யின் ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளில் இரத்ததானம் வழங்கியும், பல நலத்திட்டங்கள் வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் தனது உள்ளம் கவர்ந்த நடிகர் விஜய் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட முடிவெடுத்த ராஜ்பாரதி தளபதி விஜய் நேரில் சந்தித்து விட வேண்டும் என்ற நம்பிக்கையுடன், பிறந்தநாளை கொண்டாட தயாராகிவருகின்றார்,
ஏற்கனவே தலைவா என்ற விஜயின் ஓவியத்தை வலதுகையில் டாட்டூ வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் விஜய் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.