உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகள் சுற்றுச்சூழலின் இயற்கை அரணாக உள்ளதன் முக்கியத்துவம் குறித்தும், பாதுகாப்பை உணர்த்தும் விதமாகவும் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் மாவட்ட வன அலுவலர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கேக் வெட்டி யானைகளுக்கு ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Comments are closed.