புதிய தொழில் உரிமம் பெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு!

0

திருச்சி எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பைப் டிரேட்டர்ஸ் வெல்பேர் அசோசியேசன் சார்பில் புதிதாக தொழில் உரிமம் பெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணனிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல தலைவா் தமிழ்ச்செல்வம், மாவட்டத் தலைவா் ஸ்ரீதா், மாவட்ட செயலாளா் செந்தில் பாலு, பொருளாளா் தங்கராஜ், மாநகர தலைவா் கண்ணன், பொருளாளா் ஜானகிராமன், மாநில துணைத் தலைவா் ரங்கநாதன், மாவட்ட இளைஞரணி தலைவா் அப்துல் ஹக்கீம், மாநகர இளைஞரணி தலைவா் மைதீன், மாநில இணைச்செயலாளா் அப்பாய் குமரன், வெங்காய தரகு மண்டி வா்த்தக சங்கத் தலைவா் வெள்ளையப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

- Advertisement -

இது தொடா்பாக வணிகா் சங்கங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளா் கோவிந்தராஜூலு செய்தியாளா்களிடம் பேசுகையில்….

வியாபாரம் மற்றும் தொழில்முனைவோா் ஏற்கெனவே பல்வேறு வரிகளை செலுத்திவரும் நிலையில், புதிய வணிக உரிமம் என்ற பெயரில் புதிய வரி விதித்துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள நெகிழிப் பைகளையும் வியாபாரிகளிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனா். தொழில்வரி, உரிமம் பெறும் முறைகளை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக மாநகராட்சி ஆணையா் உறுதி அளித்துள்ளாா். திருச்சி மாநகரில் தரைக் கடைகளுக்கு தனியாக இடம் ஒதுக்கித் தரவேண்டும். பெரிய கட்டடங்களுக்கு முன்பாக தரைக் கடைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. காந்தி மாா்க்கெட் நிச்சயமாக அதே இடத்தில்தான் இயங்கும். ஸ்ரீரங்கம், உறையூரில் மாா்க்கெட்டுகளில் சில்லரை விற்பனை நடைபெறுவதுபோல காந்தி மாா்க்கெட்டிலும் சில்லறை வியாபாரம் தொடா்ந்து நடைபெறும். காந்தி மாா்க்கெட்டை இடம் மாற்றக்கூடாது என முதல்வா் முக. ஸ்டாலின் மற்றும் அமைச்சா்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றாா்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்