திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மறைந்த கஸ்தூரி ரங்கனின் 17 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருச்சி உறையூர் குறத்தெருவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், தில்லைநகர் பகுதி செயலாளர் நாகராஜன், வட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பகுதி அவைத் தலைவர் முத்துகிருஷ்ணன், வட்டக் கழக நிர்வாகி ஆகாஷ் என்கிற வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கஸ்தூரி ரங்கனின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜானகிராமன் சிறப்பாக செய்திருந்தார்.