வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்து துறை அறிவிப்பு!

0

போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலும் தமிழகம் முழுவதும் அதிகம்பேர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bismi

இதனை கருத்தில் கொண்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 535 பேருந்துகளும், நாளை 595 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 130 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 535 பேருந்துகளும், நாளை 595 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 65 பேருந்துகளும், நாளை 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் இன்று 14,619 பயணிகளும் சனிக்கிழமை அன்று 8,953 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை 13,908 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்