அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை!
அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, எம் எல் ஏ சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாநகர மேயர் அன்பழகன், சேர்மன் துரைராஜ், அவைத் தலைவர் அம்பிகாவதி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.