100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருச்சி காவிரி ஆற்றில் மணல் சிற்பங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்!

0

2024 மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்ட நிா்வாகம், யங் இந்தியா கிளப், எம்ஏஎம் மேலாண்மை கல்லூரி ஆகியவை இணைந்து திருச்சி மாம்பழச் சாலையின் அருகே காவிரியாற்று மணலில் சிற்பங்களை வரைந்து காட்சிப்படுத்தினா்.

- Advertisement -

ஆள்காட்டி விரலில் வாக்களித்ததற்கான அடையாள மையுடன் கூடிய கையின் இலச்சினை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தேசியக் கொடி ஆகியவற்றை சிற்பங்களாக வடித்திருந்தனா். மேலும், விழிப்புணா்வு வாசகங்களையும் எழுதியிருந்தனா். இதுமட்டுமல்லாது கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்த மணல் சிற்பங்களை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பிரதீப்குமாா், பொது மக்கள் பார்வையிடும் வகையில் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கோட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, துணை ஆட்சியா் வேலுமணி, எம்ஏஎம் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா். விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்