கலா சேத்ரா சார்பில் கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி, திருச்சி மக்கள் மன்றத்தில் நடைபெற்று வருகிறது!

0

- Advertisement -

கலா சேத்ரா சார்பில் கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கைத்தறி கண்காட்சியில் மதுரை சுங்குடி சாரீஸ், ஒடிசா சம்பூல்பூர் சாரீஸ், ஹரியானா மெத்தை விரிப்புகள், ஒடிசா கைத்தறி டாப்ஸ், ஜெய்ப்பூர் ஸ்கட்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான காக்ரா சோலி, இதேபோல் காஷ்மீர் சாரீஸ், டாப்ஸ், பெங்கால் காட்டன் சாரீஸ், ஐம்பொன் நகைகள், வளையல்கள், சென்ட்னா டாய்ஸ் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமான ருத்ராட்சம், திருஷ்டியை போக்கும் கருங்காலி மாலைகள் மற்றும் உடல் நலத்தை பேணும் வகையில் அக்குபஞ்சர் பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

- Advertisement -

இந்த விற்பனை கண்காட்சியானது காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் திருச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்