- Advertisement -

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து 7 ஆம் நாள் – நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்!

0

- Advertisement -

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பகல் பத்து உற்சவத்தின் 7 ஆம் நாளான இன்று நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், வைர ரத்தின லெஷ்மி பதக்கம், மகர கர்ண பத்ரம், புஜ கீர்த்தி, ரங்கூன் அட்டிகை, சந்திர வில்லை, காசு மாலை, 2 வட முத்து மாலை, ஒட்டியாணம், அடுக்கு பதக்கங்கள் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து, வெளிர் பச்சை நிற பட்டு உடுத்தி அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Bismi

வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் வருகின்ற 22 ஆம் தேதியும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற 23ஆம் தேதியான சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.

 

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்