திருச்சி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், துணை மேயர் திவ்யா, ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன், துர்காதேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி துணை ஆணையர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.