மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

0

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன், திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம், ஜெயலட்சுமி சுமதி சகஸ்ரராம் கல்வி அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் 01/10/2023 இன்று திருச்சி தையக்கார தெருவில் உள்ள கீர்த்தனா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை திருச்சி மாவட்ட போஷகர் திரு. N. V. முரளி அவர்கள் துவக்கிவைதார். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர். திருA. S.சுதர்சன் அவர்களும்,சேவா சங்கத்தின் கௌரவத் தலைவர் சபரிதாசன் சாமி அவர்களும், தலைவர் திரு.N. ரமேஷ் அவர்கள், செயலாளர் M. ஸ்ரீதர் அவர்கள், துணைத்தலைவர் S. முத்து அவர்கள், சௌராஷ்ட்ரா சங்கத்தின் தலைவர் திரு. B. R.ஜெனார்த்தனன் அவர்களும்,தில்லைநகர் lions கிளப் தலைவர் ராஜ்மோகன் அவர்கள் முகாம் ஒருங்கிணைப்பாளர் சேவா அலுவலக செயலாளர் C. R.அம்சராம், R.சகஸ்ரநாமன் கலந்து கொண்டனர். வாலிபர் சங்க தலைவர் மகேஷ் தலைமையில் செயலாளர் ஹரி வரவேற்புரை ஆற்றினார் .வெங்கடேஷ் நன்றி உரை தெரிவித்தார். மற்றும் சங்க நிர்வாகிகள்
சிதாம்பரம், துரை, தனஞ்செயன்,பாண்டியன், பாலசுந்தரம்,
வினோத்கண்ணா ரவிசங்கர் ஹரிஹரன் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்தினர். முகாமில் 175க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுமார் 40 நபர்கள் இலவச அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்றவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்