- Advertisement -

திருச்சியில் அதிர்ச்சி, பள்ளி கட்டிடத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – 4 பள்ளி மாணவர்கள் போக்சோவில் கைது!

- Advertisement -

திருச்சியில் அதிர்ச்சி, பள்ளி கட்டிடத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – 4 பள்ளி மாணவர்கள் போக்சோவில் கைது!

 

​திருச்சி, செப். 5:

 

திருச்சியில் 16 வயதுடைய மனநலம் குன்றிய சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பள்ளி மாணவர்களை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Vagai

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோரை இழந்த இவர், லேசான மனவளர்ச்சிக் குறைபாடு உடையவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள், அந்த சிறுமியை அருகிலுள்ள கட்டுமானப் பணி நடைபெற்று வரும் பள்ளி கட்டிடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அச்சிறுமியை நால்வரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

இச்சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்து தப்பிய சிறுமி, அப்பகுதி மக்களிடம் அழுதுகொண்டே நடந்த விவரங்களைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Bismi

​புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட 4 சிறுவர்களையும் பிடித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து:

​4 சிறுவர்கள் மீதும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

​கைது செய்யப்பட்ட நால்வரும் தஞ்சாவூரில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் (Juvenile Observation Home) ஒப்படைக்கப்பட்டனர்.

​பிடிபட்ட சிறுவர்கள் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

​பொதுமக்கள் கோரிக்கை

சமீப காலமாக அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி வருவதாகவும், அதன் விளைவாகவே இத்தகைய கொடூர குற்றங்கள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினருக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்