திருச்சி ஆத்மா மருத்துவமனை, திருச்சி மாவட்ட காவல்துறை, பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு மற்றும் 23 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திருவெறும்பூர் பகுதியில் உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கை ஒப்ப விழிப்புணர்வு நடைபெற்றது
திருச்சி ஆத்மா மருத்துவமனை, திருச்சி மாவட்ட காவல்துறை, பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு மற்றும் 23 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திருவெறும்பூர் பகுதியில் உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கை ஒப்ப விழிப்புணர்வு நடைபெற்றது
உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து பொதுமக்களிடத்தில் புகையிலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
திருச்சி ஆத்மா மருத்துவமனை, திருச்சி மாவட்ட காவல்துறை, பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு மற்றும் 23 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திருவெறும்பூர் பகுதியில் உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கை ஒப்ப விழிப்புணர்வு நடைபெற்றது.
திருச்சி திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் திரு அறிவழகன் அவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார், ஆத்மா மருத்துவமனையின் மனநல மருத்துவர் மற்றும் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை குறித்து சிறப்புரை வழங்கினார்,
மற்றும் ஆத்மா மருத்துவமனையில் சமூக மனநல ஆலோசகர் கரண்லூயிஸ் அவர்கள் நன்றி உரையாற்றினார் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தார். பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு சிறப்பித்தார், மேலும் நிகழ்ச்சியில் 23 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு நோட்டீசை பொதுமக்கள் இடத்தில் வழங்கினர்.
மேலும் நிகழ்ச்சியில் பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் மாநில ஆலோசகர் குழு வீரேந்தர் குமார், மாநில மக்கள் தொடர்பு அலுவலர் டூயட் சசி, திருச்சி மாவட்ட மக்கள் தொடர்பாளர் ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.