விவசாயிகளுக்கு மெகா அறிவிப்பு: கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி – முதல்வர் சா. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு!
விவசாயிகளுக்கு மெகா அறிவிப்பு: கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி – முதல்வர் சா. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு!
சென்னை:
தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சா. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.05.2026) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வி. காந்திராஜ், நிதித்துறை அமைச்சர் திரு. என். மரிய வில்சன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு இந்த தள்ளுபடி திட்டம் பொருந்தும். இதன் மூலம் 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், அரசுக்கு கூடுதலாக ரூ.2,044.46 கோடி செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் தள்ளுபடி செய்யப்படும் முழு விவரங்கள்:
ரூ. 50,000 வரை பெற்ற கடன்கள்:
குறு விவசாயிகளுக்கு அவர்கள் பெற்ற கடன் தொகை முழுவதும் (100 சதவீதம்) தள்ளுபடி செய்யப்படும்.
சிறு விவசாயிகளுக்கு அவர்கள் பெற்ற கடன் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.
ரூ. 50,001 முதல் ரூ. 60,000 வரை பெற்ற கடன்கள்:
குறு விவசாயிகளுக்கு ரூ. 40,000 தள்ளுபடி செய்யப்படும்.
சிறு விவசாயிகளுக்கு ரூ. 20,000 தள்ளுபடி செய்யப்படும்.
ரூ. 60,001 முதல் ரூ. 70,000 வரை பெற்ற கடன்கள்:
குறு விவசாயிகளுக்கு ரூ. 30,000 தள்ளுபடி செய்யப்படும்.
சிறு விவசாயிகளுக்கு ரூ. 15,000 தள்ளுபடி செய்யப்படும்.
ரூ. 70,001 முதல் ரூ. 80,000 வரை பெற்ற
கடன்கள்:
குறு விவசாயிகளுக்கு ரூ. 20,000 தள்ளுபடி செய்யப்படும்.

சிறு விவசாயிகளுக்கு ரூ. 10,000
தள்ளுபடி செய்யப்படும்.
ரூ. 80,001 முதல் ரூ. 90,000 வரை பெற்ற கடன்கள்:
குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி செய்யப்படும்.
சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி செய்யப்படும்.
ரூ. 90,001 முதல் ரூ. 1,00,000 வரை பெற்ற கடன்கள்:
குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி செய்யப்படும்.
சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி செய்யப்படும்.
ரூ. 1,00,000-க்கு மேல் பெற்ற கடன்கள்:
குறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி செய்யப்படும்.
சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி செய்யப்படும்.
இதர பெரு விவசாயிகள்:
கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கும் தலா ரூ. 5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, இந்த கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் தமிழக அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தும்.
தற்போதைய இக்கட்டான நிதிச் சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலன் காக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு புதிய கடன்களைப் பெற்று விவசாயிகள் விவசாயம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.
#BreakingNews #TamilNadu #Vijay #CMVijay #TNGovt #FarmersLoanWaiver #AgricultureTN #CooperativeBank #CropLoan #TamilNaduNews #FarmersWelfare





Comments are closed.