திருமயத்தில் கிராம மக்களின் வாழ்வாதாரமான 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருமயத்தில் கிராம மக்களின் வாழ்வாதாரமான 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கிராம மக்களின் வாழ்வாதாரமான 125 நாள் வேலை உறுயளிப்பு திட்டத்தை சீர் குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து திருமயம்‌ தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவருமான பிகே.வைரமுத்து தலைமை வகித்தார்.

 

இந்த கண்டன‌ ஆர்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ராதா கிருஷ்ணன், அதிமுக திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கோனாபட்டு மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எல்.ஆர் பழனிவேலு, மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர்‌ சிவகுமார்,மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பாலாஜி குமரேசன், மாவட்ட துணை செயலாளர் சரசுமாரிமுத்து, மாவட்ட அணி செயலாளர்கள் வெங்களூர் மணி (எ) லட்சுமணன், குழிபிறை பாண்டியன், வக்கீல் ஆசைத்தம்பி சிஎன்சி.சிவா, புலிவலம் இளவரசன், கோனாபட்டு தர்மன், தலைமை கழக பேச்சாளர் குமார் உள்ளிட்ட அதிமுக மாநில, மாவட்ட ,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்