கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது

Bismi

கள்ளக்குறிச்சி மாவட்டம் வானபுரம் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில்
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், “இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், முற்றிலும் ஒழித்திடும் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும். எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும். இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும், நான் உளமார உறுதி கூறுகிறேன்”.
என பலர் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்