நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 5 ஆம் நாளில் – திருமாலை பிரபந்தம் செவிமடுக்க .
நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 5 ஆம் நாளில் – திருமாலை பிரபந்தம் செவிமடுக்க .

சௌரிக் கொண்டை சாற்றி, அதில் புஜ கீர்த்தி இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம்,முத்து பட்டை , முல்லை பூ சரம் சுற்றி , வைரஅபய ஹஸ்தம் சாற்றி அதில் தங்க கோலக்கிளி எடுத்து கீழே தொங்கல் பதக்கம் ஆட திருமார்பில் – ஸ்ரீ ரங்க விமான பதக்கம், கல் இழைத்த ஒட்டியாணம் .
அதன் கீழே சிகப்பு கல் சூர்ய பதக்கம்: அதன் கீழ் வரிசையாக வெள்ளைகல் அடுக்கு பதக்கங்கள்,காசு மாலை, 8 வட முத்து மாலை- “அரைச் சிவந்த ஆடையின் மேல்” என்ற அமலனாதிபிரான் பாசுரத்திற்கு ஏற்ப சிவப்பு நிற பட்டு அணிந்து பின் சேவையாக – சிகப்புக் கல் பதக்கம், காசு மாலை , வைரக்கல் ரங்கூன் அட்டிகை அணிந்து சேவை சாத்திக்கிறார்.


Comments are closed.