- Advertisement -

இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும்- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

- Advertisement -

இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும்- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

வன்முறைக்குப் பின்னர் முதன்முறையாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு பயணம்!

இம்பாலில்  2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெடித்த வன்முறைக்குப் பின்னர், முதன் முறையாக நவம்பர் 20 முதல் 22 தேதி வரை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் கலந்து கொள்ள அவர் மணிப்பூருக்கு வருகைதருவதாக அம்மாநில பொதுச் செயலாளர் தருண்குமார் சர்மா தெரிவித்தார்.

Vagai

இதுகுறித்து பேசிய தருண்குமார் சர்மா, “ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு விழாவையொட்டி எங்கள் தலைவர் மாநிலத்திற்கு வருகை தருகிறார். நவம்பர் 20 அன்று இம்பாலில் உள்ள கோன்ஜெங் லெய்காயில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் மற்றும் புகழ்பெற்ற நபர்களை அவர் சந்திப்பார். நவம்பர் 21 ஆம் தேதி, மணிப்பூர் மலைப்பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர்களை பாகவத் சந்தித்து உரையாடுவார்.” என்றார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வன்முறை வெடித்ததிலிருந்து மணிப்பூருக்கு மோகன் பாகவத்தின் முதல் பயணம் இதுவாகும். அவர் கடைசியாக 2022-ல் மணிப்பூருக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bismi

 “இந்துக்கள் இல்லாமல் உலகம் இருக்காது என்றும் இந்து சமூகம் அடக்குமுறையை ஒருபோதும் அனுமதிக்காது என்றும்” ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பாகவத், “உலகின் ஒவ்வொரு தேசமும் எல்லா வகையான சூழ்நிலைகளையும் கண்டிருக்கிறது. யுனான் (கிரீஸ்), மிஸ்ர் (எகிப்து), ரோம் என அனைத்து நாகரீகங்களும் பூமியில் இருந்து அழிந்துவிட்டன. நமது நாகரீகத்தில் ஏதோ உள்ளது, அதனால்தான் நாம் இன்னமும் இங்கே இருக்கிறோம். பாரதம் என்பது ஒரு அழியாத நாகரீகத்தின் பெயர். நமது சமூகத்தில் ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ளோம். அதனால்தான், இந்து சமூகம் எப்போதும் இருக்கும். இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும். உலகை நிலை நிறுத்துவதற்கு இந்து சமூகம் மையமானது.தேசத்தை கட்டியெழுப்பும் போது முதல் தேவை, நாட்டின் வலிமை. வலிமை என்றால் பொருளாதார வலிமை. நமது பொருளாதாரம் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று சொன்னால், சில நேரங்களில் அது தவறான பொருளை தரும். எனவே, நமது நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சுய சார்பு கொண்டதாக இருக்க வேண்டும். நாம் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது.நாம் நமது பொருளாதாரத்தை தற்சார்பு பொருளாதாரமாக மாற்றுவது ஒன்றும் கடினமானது அல்ல. வேரூன்றிய பல பிரச்சினைகளை நமது சமூகம் சமாளித்து வந்துள்ளது என்பதற்கு ஏராளாமன உதாரணங்கள் உள்ளன. உதாரணத்துக்கு நக்சலிசம். சமூகம் இனி இதை பொறுத்துக்கொள்ளாது என முடிவெடுத்ததால் இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான நமது சுதந்திர போராட்டமும் அப்படித்தான்.

பிரிட்டிஷ் பேரரசில் சூரியன் மறைவதில்லை என்பார்கள். ஆனால், இந்தியாவில் அவர்களின் சூரியன் ஏற்கனவே மறையத் தொடங்கியிருந்தது. 90 ஆண்டுகளாக நாம் இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டோம். அடக்குமுறைக்கான குரலை நமது சமூகம் ஒருபோதும் அனுமதித்தது இல்லை. சில நேரங்களில் நமது குரல் பலவீனமடைந்தது. சில சமயங்களில் அது வலுவடைந்தது. ஆனால், ஒருபோதும் அது இறக்க நாம் அனுமதித்தது இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்