குடியிருப்பு பகுதியில் குண்டர்களை ஏவிவிட்டு ரகளையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி, மாநகர காவல் ஆணையாளரிடம் பெண்கள் புகார்மனு
குடியிருப்பு பகுதியில் குண்டர்களை ஏவிவிட்டு ரகளையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி, மாநகர காவல் ஆணையாளரிடம் பெண்கள் புகார்மனு
திருப்பூர் மாநகராட்சி 25வது வார்டு சோளிபாளையம் பாட்டையப்பன் நகர் கிழக்குத் தோட்டம் பகுதியில் அதிவேகமாக சென்று வரும் இருசக்கர வாகனங்களால் அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது
வேகமாக செல்லும் இரு சக்கர வாகனங்களால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றதால் பொதுமக்கள் அச்சமடைந்து.


ரோடுகளில் குடியிருப்பியுள்ள மக்கள் சிறிய அளவிலான மண் வேகத்தடை அமைத்து வந்தனர்.
மேற்படி பகுதியில் ஜெர்மன் நாய் வளர்த்ததால் குழந்தைகள், முதியவர்கள், பொது மக்களுக்கு பெரும் பிரச்சனைகள், தொந்தரவு காரணமாக மாநகராட்சி ஆணையரிடம் புகாரளித்த நிலையில் ஜெர்மன் நாய் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஜெர்மன் நாய் உரிமையாளர் தொடர்ச்சியாக இப்பகுதியிலுள்ள குழந்தைகள், முதியவர்கள், பொது மக்களை தொந்தரவு செய்தவர் பொது வேகத்தடை அமைக்கப்பட்டதை பொறுத்துக் கொள்ளாத ஜெர்மன் நாய் உரிமையாளர் வேகத்தடை அமைக்கப்பட்ட இடங்களில். சம்பந்தமில்லாத சமூகவிரோதிகள் 30க்கும் மேற்பட்ட குண்டர்களை அழைத்து வந்து பெண்களிடம் தகாத வார்த்தைகளை பேச தகராறு செய்து வேகத்தடைகளை அகற்றி ரகளையில் ஈடுபட்டதால் என்ன செய்வதென அச்சமடைந்த பெண்கள் உடனடியாக அருகிலுள்ள 15.வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் தொடர்ச்சியாக அப்பகுதிக்கு சம்பந்தமில்லாத 30க்கும் மேற்பட்ட குண்டர்களை அழைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளதால் இது தொடர்பாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணனுக்கு தெரிவித்த நிலையில், அப்பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதியில் குண்டர்களை ஏவிவிட்டு ரகளையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் தலைமையில் மாநகர காவல் ஆணையாளரிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளரிடம் குழந்தைகள் பெண்களின் உயிருக்கு
அச்சுறுத்தல்கள் தினசரி இருப்பதால் உடனே சமூகவிரோதிகள் குண்டர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தனர்.





Comments are closed.