திருச்சி மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்!
திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டடுள்ளார்

தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக தமிழக அரசு பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழகத்தில் பணியாற்றி வரும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
அதில் தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குநராக பணியாற்றி வந்த மோகன், முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த வைத்திநாதன் தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குநராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.




