திருச்சி அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை திறப்பு விழா

0

திருச்சி அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை திறப்பு விழா

- Advertisement -

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம், திருச்சி பனையபுரம் கிளை சார்பாக அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் கொடி ஏற்றும் விழா கடந்த 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் திருச்சி பனையபுரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் மாநில நிர்வாகிகள் ஆர்.வி.பரதன் ,ஆர்.வி .பாலமுருகன் ஆகியோர் காளா பிடாரி பெயர் பலகையை திறந்து வைத்து சங்க கொடியையும் ஏற்றி வைத்தனர். பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் கி.பி 705 முதல் கி.பி 745 வரை தமிழகத்தை சிறப்பாக ஆட்சி நடத்திய பேரரசர்.இவரின் மெய்க்கீர்த்தி இன்றும் திருக்காட்டுப்பள்ளி செந்தலை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ளது. தமிழுக்கு முதன் முதலில் மெய்க்கீர்த்தி அமைத்த பேரரசர் இவரே.இவர் போருக்கு செல்லும் போது திரு நியமம் காளா பிடாரியை வணங்கி, வாகைப்பூ சூடி சென்று 1 6 க்கும். மேற்பட்ட போர்க்களங்களில் வெற்றி பெற்றவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் , திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமத்தில் 1008 லிங்கங்களை அமைத்து வணங்கினார். அதில் பெரும் பாலான லிங்கங்களை 1961 ல் காவிரி ஆற்றின் பெருவெள்ளத்தின் காரணமாக பழமா நேரி ஏற்பட்ட உடைப்பினை அடைக்க ,அவ்வுடைப்பில் போட்டு வெள்ளம் தடுக்கப்பட்டது. அவ் சிவலிங்கங்களை மீட்டு, மீண்டும் நேமத்தில் கோயில் அமைக்க வேண்டி அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பபட்டுள்ளது. இத்தகைய சிறப்புமிக்க பழமையான காளா பிடாரி கோயில் மற்றும் ஆயிரத்தளி காளா பிடாரனேஸ்வரர் ஆலயத்தை தமிழக அரசு அமைத்து தர வேண்டும் எனும் நோக்கில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக காளா பிடாரி கோயிலுக்கு செல்லும் வழிகாட்டும் பெயர்பலகை திறக்கப்பட்டது. இவ்விழாவில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் திருச்சி நகரத்தலைவர் சங்கர், அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை செயலாளர் பேராசிரியர் சந்திரசேகரன், பனையபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துக்குமார், பனையபுரம் கிளை நிர்வாகிகள் பாண்டித்துரை, ராஜ் ,சிவா, சரவணன், கௌதம் மற்றும் முத்தரையர் சமுதாய முன்னோடிகள்,பனையபுரம் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்க்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் பனையபுரம் கிளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்