தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, எழுத்துத் தேர்வு அமைதியாக, குறைபாடுகள் இன்றி சிறப்பாக நடைபெற்றதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்.
திருநெல்வேலி,நவ.9:-
திருநெல்வேலி மாவட்டத்தில்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் மேற்கொள்ளப்பட்ட, 2 -ஆம் நிலை காவலர்/சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் எழுத்துத் தேர்வு, இன்று (நவம்பர். 9) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 3 தேர்வு மையங்களில், அமைதியாகவும், எந்த வித குறைபாடுகள் இன்றியும், சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தலைமையில் , தேர்வு நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகள், நல்ல முறையில் செய்யப்பட்டிருந்தன.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தேர்வினை, இம் மாவட்டத்திற்கான “சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளர்” K.S. நரேந்திரன் நாயர் (காவல்துறை தலைவர் ,
Establishment) அனைத்து தேர்வு மையங்களுக்கும், நேரில் சென்று மேற்பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
“தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்”தெரிவித்து உள்ள வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின் படி, இந்த தேர்வு சிறப்பாக நடத்தி, முடிக்கப்பட்டது.
இந்த தேர்வுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில், மொத்தம் அனுமதிக்கப்பட்டு இருந்த 4,905 விண்ணப்பதாரர்களில், 4,214 பேர் மட்டுமே, தேர்வில் பங்கேற்றிருந்தனர். மீதியுள்ள 691 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை! என்பது, குறிப்பிடத்தக்கதாகும். இந்த தகவல்களை, “மாவட்ட காவல் கண்கணிப்பாளர்” நை.சிலம்பரசன், தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.