திருச்சியில் மூன்று நாட்கள் ஹெலிகாப்டர் சுற்றுலா – திருச்சி மக்கள் வானில் வட்டமடிக்க அரிய வாய்ப்பு!

0

- Advertisement -

திருச்சி தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள பகுதி. திருச்சி மாவட்டம் முழுவதையும் வானில் இருந்து சுற்றிப்பார்க்க தனியார் நிறுவனம் (எல்.சி.ஏ. என்டெர்டெயிண்மெண்ட் மற்றும் ஏரோ டோன்) இணைந்து ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். அதன்படி திருச்சி சமயபுரம் அருகே உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் வரும் 26,27,28 ஆகிய மூன்று நாட்கள் ஹெலிகாப்டர் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் இருந்து கிளம்பும் ஹெலிகாப்டர் திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்கோவில், காவிரி ஆறு,  கொள்ளிடம் ஆறு, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சர்ச், நத்தர்ஷா பள்ளிவாசல் மற்றும் திருச்சியில் உள்ள முக்கியமான நிறுவனங்கள் ஆகியவற்றை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏற்பாடு செய்திருக்கும் ஏற்பாட்டாளர்கள் திருச்சியில் இது முதன்முறை என கூறியுள்ளனர். ஒரு நபருக்கு ரூபாய் 5,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஃபாலோயராக இருப்பவர்களுக்கு தள்ளுபடியாக 1000 தருகிறார்கள். ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிடும் போது புகைப்படங்களும் நீங்கள் எடுக்கலாம்.  8508098648 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஹெலிகாப்டரில் திருச்சியின் அழகை கண்டு களியுங்க மக்களே.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்