அண்ணாமலை ஐபிஎஸ் ஆனதற்கு காரணமே தந்தை பெரியாருடைய கொள்கைகள் தான் – துரை வைகோ பேட்டி!
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், துரை வைகோ MP தலைமையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. துரை வைகோ அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்…
மத்தியில் பாஜக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து விவசாயிகள் வஞ்சிக்கபட்டு வருகிறார்கள். எந்தவிதமான நல்ல திட்டங்களையும் செய்யவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயிகளின் விலை பொருளுக்கு தகுந்த விலை கிடைக்கவில்லை, விவசாய நிலங்களில் இருக்கும் பயிர்களை காட்டுப் பன்றி அழித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
திருச்சியை பொறுத்தவரை பல்வேறு திட்டபணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாதாள சாக்கடை திட்டம் இரண்டாம் கட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. நான் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர், அதிகாரிகளுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் விரைந்து பணிகள் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கபடும் என்றார்.
குறிப்பாக திருச்சியில் நடைபெற்று வரும் ஒரு சில திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் பங்குகள் உள்ளது. அவர்கள் உரிய நேரத்தில் அனுமதி அளிக்கவில்லை, அதேசமயம் நிதி நெருக்கடி உள்ளது, ஆகையாக் தான் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி விரிவாக்க என்பது நல்ல திட்டம் ஆகும். பல்வேறு கிராமங்களில் இருக்கும் மக்கள் ஆதரவு தருகிறார். ஆனால் ஒரு சில கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது உண்மை தான். இந்த மக்கள் போராட்டத்திற்கு முக்கிய காரணம் அதிமுக தான். தேர்தல் நேரத்தில் மாநகராட்சியுடன் கிராமங்கள் இணைக்கபட்டால் 100 நாள் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும், வளர்ச்சி திட்டம் எதுவும் இருக்காது என்று மக்களை தூண்டிவிடுகிறார்கள் என்றார். மாநகராட்சி , நகராட்சியுடன் கிராமங்கள் இணைந்தால் வளர்ச்சி திட்டம், வேலை வாய்ப்பு திட்டங்களை திமுக அரசு நிச்சயமாக உருவாக்கி தரும் என தெரிவித்தார்.
சமூகநீதி, பெண்கள் உரிமை இருப்பதற்கு காரணம் தந்தை பெரியார் தான். தந்தை பெரியார் இல்லாமல் சமூக நீதி கிடையாது, பெண்கள் உரிமை கிடையாது. தமிழ்நாடு இன்று முன்னேற்றம் அடைந்ததற்கு ஒரே காரணம் தந்தை பெரியாரின் கொள்கைகள் தான். யாராலும் இதை மறுக்க முடியாது. குறிப்பாக இன்று இருக்கக்கூடிய இளைய சமுதாயத்திற்கு இதை பற்றி தெரிய வாய்ப்பில்லை. இன்று அனைவரும் இந்த சமூகத்தில் முன்னேறியதற்கு காரணம் தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் தான். ஆனால் பெரியாரின் கொள்கைக்கு எதிராகவும் திராவிட கொள்கைக்கு எதிராகவும் இருப்பவர்கள் சனாதனம் ஆர்எஸ்எஸ் போன்றவர்கள் தொடர்ந்து இது போன்ற விமர்சனங்கள் வைப்பது வழக்கம் தான். ஆனால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்று பேசுவது சீமானுக்கு மட்டுமல்ல நாம் தமிழர் கட்சிக்கும் நல்லது கிடையாது. பெரியார் இல்லாமல் அண்ணா இல்லை, அண்ணா இல்லாமல் தமிழ்நாடு இல்லை. இவற்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தந்தை பெரியாருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை திராவிட கட்சிகள் அளித்து வருகிறார்கள். அவருடைய கொள்கைகளை பின்பற்றி தான் திராவிட கட்சிகள் இயங்கி வருகிறது. தந்தை பெரியாரின் நூல்களை அரசுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசுக்கு முன் வைக்கிறேன் என்றார்.
அண்ணாமலை அவர்கள் ஐபிஎஸ் ஆனதுக்கு காரணமே தந்தை பெரியாருடைய கொள்கைகள் தான். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என சமுதாயத்தில் நல்ல இடத்திற்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைதான். பெரியாரை பற்றி பேசுவது தவறு என்றார்.
Comments are closed.