தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் சார்பாக சுதந்திரப் போராட்ட வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களின் 138 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் சார்பாக சுதந்திரப் போராட்ட வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களின் 138 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் சார்பாக சுதந்திரப் போராட்ட வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களின் 138 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் சிறப்பான முறையில் நடைபெற்றது,
விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் ஸ்ரீரங்கம் இரண்டாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவகர் அவர்களும், திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர் நல சங்கத்தின் தலைவர் பிரேம் குமார் ராஜன் அவர்களும் கலந்து கொண்டனர், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டாக்டர் சுரேஷ் அவர்களின் தலைமையில் மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம் அவர்கள் சங்கக் கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார், இந்த விழாவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்து அவர்களும் ஸ்ரீரங்கம் நகர செயலாளர் ராஜலிங்கம், பொருளாளர் சங்கர் பிரபாகரன், இளைஞர் அணி அமைப்பாளர்கள் சின்ன ராஜா, ரமேஷ், ரகுராமன், மோகன்ராஜ் மற்றும் மாவட்ட இணை துணை நிர்வாகிகள், கிளைச் சங்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள், மாவட்ட பொருளாளர் கலைமணி அவர்கள் நன்றி கூறினார்.