தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்!

திருச்சி தென்னூர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற உக்கிர காளியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 4 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் மாலை நேரத்தில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

- Advertisement -

விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு உக்கிர காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

இதில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “ஓம் சக்தி” “பராசக்தி” “ஜெய் காளி” என்ற கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கோவிலை சுற்றி உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலை நிறுத்தப்பட்டது. இந்த சித்திரை தேர் திருவிழா முன்னிட்டு 100 க்ககும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்