பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகை முன்னிட்டு கொலு கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் 02.09.2025 குத்து விளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளார்
பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகை முன்னிட்டு கொலு கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் 02.09.2025 குத்து விளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளார்
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரதோப்பில் வருகின்ற நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 02.09.2025 முதல் 04.10.2025 வரை (ஞாயிறு உட்பட) கொலு கண்காட்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கொலு கண்காட்சியை மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 02.09.2025 செவ்வாய் கிழமை அன்று காலை 9.00 மணியளவில் குத்து விளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்பிக்க உள்ளார்கள்.

அழகிய கொலு பொம்மைகளை திருச்சி மாநகர மக்கள் வாங்கி தங்கள் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதோடு இந்த சிலைகளை உற்பத்தி செய்யும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் உதவுவதால் வேண்டும் பூம்புகார் நிறுவனம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.





Comments are closed.