பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சேலம், திருப்பூர் , தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சேலம், திருப்பூர் , தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பகுருதின் அலி அகமது ஒருங்கிணைப்பில் , நிறுவனர் தலைவர் வேல்முருகன் ஆணைப்படி , மாநில மகளிரணி கவுரவ ஆலோசகர், சேலம், திருப்பூர், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் பிரேமா தலைமையில், சேலம் மாவட்ட மகளிரணி தலைவி ஜானகி, சேலம் மாவட்ட மகளிரணி துணை தலைவி கலைவாணி ஏற்பாட்டில், பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் மூன்று மாவட்டம் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட தலைவர் அருண்குமார், புதிதாக பொறுப்பேற்றுள்ள சேலம் மாவட்ட தலைவர் பிரவீன் குமார், திருப்பூர் மாவட்ட தலைவர் ,மற்றும் முக்கிய நிருவாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானகள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் உணவு வழங்கப்பட்டது.