புதுக்கோட்டை மாவட்ட கூடைப்பந்து அணி தேர்வு நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்ட கூடைப்பந்து அணி தேர்வு நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்ட கூடை பந்தாட்ட கழகத்தின் சார்பாக 13 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கான புதுக்கோட்டை மாவட்ட கூடைப்பந்து அணி தேர்வு அறந்தாங்கி எல் என் புறத்தில் அமைந்துள்ள சிவானி வித்யா மந்திர் பள்ளியில் உள்ள கூடை பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.
இத்தேர்வில் 70 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட
கூ டைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் தாய்மாணவன், புதுக்கோட்டை மாவட்ட
கூடைப்பந்தாட்ட கழகத்தின் செயலாளர் முனைவர்
குயிண்ட்டன், புதுக்கோட்டை மாவட்ட கூடைப்பந்து பயிற்றுநர் சண்முகப்பிரியன், தமிழ்ச்செல்வி மற்றும் அறந்தாங்கி கூடைப்பந்து கழகத்தின் பயிற்றுநர்கள் வேலு. செல்வி ராஜேஸ்வரி பங்கேற்றனர்.
Comments are closed.