பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு

- Advertisement -

திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2024- 25 ஆம் கல்வி ஆண்டில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு கேடயமும், டைட்டன் வாட்ச் வழங்கப்பட்டது, மூன்றாம் பரிசாக கேடயமும், டிபன் பாக்ஸும் வழங்கப்பட்டது இப்பரிசினை மாணவர்களுக்கு வழங்கியவர்கள் ஓய்வு பெற்ற மேலாளர் நாகராஜன் BHEL அவர்களும், ஓய்வு பெற்ற மேலாளர் நஜ்முதீன்BHEL அவர்களும் மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கினார்கள், தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் பரிசுகளை அள்ளி குவித்தனர், விழாவிற்கு வருகை தந்தவர்களை இப்பள்ளியின் மூத்த ஆசிரியை நந்தினி அவர்கள் வரவேற்புரை அளித்தனர் , விழாவில் பரிசுகளை வழங்கியவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் சுஜிதா அவர்கள் நன்றி கூறினர். விழா ஏற்பாடுகளை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அழகு சுப்பிரமணியன், மற்றும் SMC,PTA உறுப்பினர்கள், விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். விழாவில் 2025-26 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 480 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்